பொள்ளாச்சி சம்பவத்தை பிரதிபலிக்கிறதா சூர்யா 40? தீயாய் பரவும் தகவல்!

 


சூர்யா சூரரை போற்று படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.  இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

அரசு தளர்வுகள் அறிவித்து சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளதால்  தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். 

இந்த படத்தின் கதையை ரகசியமாக வைத்துள்ளனர். பாண்டிராஜ் படம் என்பதால் இது கிராமத்து கதையம்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக தகவல் வெளியானது. அதன் படி, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. 

பல இளம் பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை திரைக்கதையாக உருவாக்கி, படமாக்கி வருவதாகவும் பாலியல் குற்றவாளிகளை தேடிப்பிடித்து தண்டிக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாகவும் தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது. 

ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் வருகிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் உள்ளனர்.